1870: அல்ப்ஸ் மலைக்கூடாக 12.8 கி.மீ. நீளமான சுரங்கப்பாதை நிர்மாணம் பூர்த்தியாகியது.
1933: எவ்.எம். வானொலிக்கு காப்புரிமை பெறப்பட்டது.
1982: டைம் சஞ்சிகையினால் வருடாந்தின் சிறந்த நபர் விருது முதல் தடவையாக மனிதர் அல்லாத ஒன்றுக்கு – கணினிக்கு- வழங்கப்பட்டது.
1991: சோவியத் யூனியனின் நாடாளுமன்றம் சுப்ரீம் சோவியத் கூடி, சோவியத் யூனியனை சம்பிரதாயபூர்வமாக கலைத்தது.
1937: மத்திய ஐரோப்பாவில் வீசிய புயலினால் 137 பேர் பலி.
2003: ஈரானின் பாம் நகரில் பூகம்பத்தினால் சுமார் 10 ஆயிரம் பேர் பலி.
2004: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட பூகம்பத்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, மலேஷியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் சுமார் 250,000 பேர் பலி.
2006: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் குழாயொன்று வெடித்ததால் 260 பேர் பலி.
No comments:
Post a Comment