Monday, December 13, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 12

1862: அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது  யாஸு நதியில் யூ.எஸ்.எஸ். கெய்ரோ எனும் கப்பல் பொறிவெடியில் சிக்கி மூழ்கியது. இலத்திரனியல் பொறிவெடி மூலம் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது ஆயுதக் கப்பல் இது.
1901: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடாக முதலாவது வானொலி சமிக்ஞையை மார்கோணி பெற்றார்.

1911: இந்தியத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1911: பிரிட்டனின் 5 ஆம் ஜோர்ஜ் மனர், இந்தியாவின் மன்னராகவும் பதவியேற்றார்.

1940: பிரிட்டனின் ஷீபில்ட் நகரில்  ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சினால் பிரிட்டனில் 70 பேர் பலி.
1942: கனடாவின் நியூபவுண்லாந்தில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட  தீயினால் சுமார் 100 பேர் பலி.
1963: பிரிட்டனிடமிருந்து கென்யா சுதந்திரம் பெற்றது.
1979: கொலம்பியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 259 பேர் பலி.
1985: கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 256 பேர் பலி.

2000: ஜோர்ஜ் புஷ், அல் கோர் ஆகியோருக்கிடையிலான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பாக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment