Thursday, December 23, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 23

1947: முதல் தடவையாக ட்ரான்ஸிஸ்டர் செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டது.

1948: சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தினால் யுத்தக் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 ஜப்பானியர்கள் டோக்கியோ நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1957: அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் கிறேக் வரலாற்றின் மிக இளமையான ( 22 வருடங்கள், 194 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரானார்.

1970: நியூயோர்க் நகரில் உலக வர்த்தக நிலையத்தின் வடக்குக் கோபுரம் 1368 அடி (417) மீற்றர் உயரத்தை அடைந்தது. அக்காலத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக அது விளங்கியது.

1972: மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலியாகினர்.

1972: சிலியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களின் பின் மீட்கப்பட்டனர்.

1979: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சோவியத் யூனியன் துருப்புகள் கைப்பற்றின.

1990: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 88 சதவீதமான மக்கள் வாக்களித்தனர்.

2002: ஈராக்கின் மிக் 25 விமானத்தின் மூலம் ஆளில்லா விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. உலகில் ஆளில்லா விமானமொன்று தாக்குதலொன்றில் சம்பந்தப்பட்டது அதுவே முதல் தடவை.

2003: சீனாவில் இயற்கை வாயு அகழ்வுக் களமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 234 பேர் பலி.

2005: அஸர்பைஜானில் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பலி.

2005: சூடானுக்கு எதிராக ஆபிரிக்காவின் சாட் நாடு யுத்தப் பிரகடனம் செய்தது.