Thursday, December 16, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 15

1914: ஜப்பானில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட காஸ் வெடிப்புச் சம்பவத்தால் 687 பேர் பலி.

1967: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பாலமொன்று உடைந்ததால் 46 பேர் பலி.

1970: தென்கொரிய கப்பல் கொரிய நீரிணையில் கவிழ்ந்ததால் 308 பேர் பலி.

1973: அமெரிக்க உளவியல் மருத்துவர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கையை உளவியல் நோய் பட்டியலிலிருந்து நீக்கியது.

1974: எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக பிரிட்டனில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: மக்கள் சீனக்குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்கும் எனவும் தாய்வானுடனான தொடர்புகளை துண்டிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

2005: சர்வதேச நாணய நிதியத்திற்கான தனது கடனை ஆர்ஜென்டீனா முன்கூட்டியே செலுத்தும் என ஆர்ஜென்டீன ஜனாதிபதி நெஸ்டர் கேர்ச்னர் அறிவித்தார்.

2009: போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.

No comments:

Post a Comment