Wednesday, December 8, 2010

2012ல் என்ன நடக்கப் போகிறது?

2012ல் உலக அழிவு பற்றி எச்சரிக்கை சொல்லப்பட்டது.அதற்கு திகதியை அறிவித்து விட்டது என்னை இன்னும் யோசிக்க வைத்துள்ளது.2012, டிசம்பர் 21ம் திகதியே இந்த சம்பவம் நடைபெறவுள்ளது.


'

என்ன கொடும இது'என்று வடிவேல் பாணியில் தலையில் கை வைத்துகொண்டேன்.2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.ஆனால் சில விடயங்கள் என்னை சரியாக இருக்குமோ,என என்னை யோசிக்க வைக்கிறதே!!!!!

இதற்கு இப்போது ஏற்பட்டிருக்கும் உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.ஆசியா கண்டத்தில் கடுமையான வெள்ளம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நாகரீகம் வளர்ந்து வரும் தற்போதைய உலகில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சு வாயுக்களால் பூமி வெப்பமயமாகி வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.

ஆனால் இன்னும் இதை நம்ப முடியாமல் சில விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தவில்லை.(எத நம்ப!?)ஏற்படப்போகின்ற விளைவால் 30 சதவீதமான உயிரினங்கள் அழிவடையலாம் என எதிர்வு கூறப்ப்பட்டுள்ளது.(குழப்ப்புறாங்க ஐயா!)


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விஞ்ஞானி உண்டு என அனைவரும் மறந்து போயிருப்பது புரிகிறது.உலகம் என்றாவது அழியத்தானே போகிறது.இது என்னை பொறுத்து எல்லா மதத்திலும் கூறப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இதை வைத்துக் கொண்டு சூது விழையாட்டுக்கள் ஆரம்பிக்கப்படலாம்.வாஸ்த்து சாஸ்த்திரங்களை வைத்தும் விழையாட்டுக்கள் ஆரம்பிக்கப்படலாம்.

என்ன நடந்ததோ அது நன்றகவே நடந்நது....
எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாக்வே நடக்கும்.....

No comments:

Post a Comment