Friday, December 24, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 24

1294: பாப்பரசர் பதவியிலிருந்து 5 ஆம் புனித செலஸ்டின் ராஜினாமா செய்ததால் 8 ஆம் பொனிபேஸ் பாப்பரசராக தெரிவானார்.

1906: முதலாவது வானொலி ஒலிபரப்பை கனடாவைச் சேர்ந்த ரெஜினோல்ட் பெஸென்டென் நிகழ்த்தினார். கவிதையொன்றும் வயலின் இசையொன்றும் உரையொன்றும் ஒலிபரப்பப்பட்டது.
1914: முதலாம் உலக யுத்தத்தில் நத்தார் போர்நிறுத்தம் ஆரம்பமாகியது.
1914 அல்பேனியா சுதந்திரம் பெற்றது.
1929: ஆர்ஜென்டீன ஜனாதிபதி ஹிபோலிட்டோ யிரிகோயெனை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.
1951: இத்தாலியிடமிருந்து லிபியா சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் மன்னராக பதவியேற்றார்.
1966: அமெரிக்க இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கனடா எயார் விமானமொன்று தென் வியட்நாமில் விபத்துக்குள்ளாகி 129 பேர் பலி.
1968: அப்பலோ 8 விண்வெளிப் பயணத்தின் மூலம் மனிதர்கள் முதல் தடவையாக சந்திரனை சுற்றிவந்தனர். 10 தடவை அவர்கள் சந்திரனை வலம் வந்தனர்.

1979: ஐரோப்பாவின் முதலாவது ரொக்கட்டான ஆரியன் ஏவப்பட்டது.
1997: அல்ஜீரியாவில் கலவரங்களால் 50-100 பேர் படுகொலை.
 

No comments:

Post a Comment