Saturday, December 25, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 25

1643: அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு, கிழக்கிந்திய கம்பனியின் கப்டன் வில்லியம் மைனோரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
1926: ஜப்பானிய சக்கரவர்த்தி டாய்ஸோ காலமானார்.
1932: சீனாவில் கான்ஸு நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 275 பேர் பலி.
1968: இந்தியாவின் தமிழ்நாட்டில் சம்பள உயர்வு கோரி போராடிய தலித் மக்கள் 42 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
1977: நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் தனது 88 ஆவது வயதில் காலமானார்.
1989: ருமேனிய ஜனாதிபதி நிகோலோ சௌசெஸ்குவும் அவரின் மனைவி எலினாவும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு, இரகசிய இராணுவ விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டதால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1991: சோவியத் யூனியன் ஜனாதிபதி பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் ராஜினாமாச் செய்தார்.

No comments:

Post a Comment