Sunday, December 26, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 26

1860: கழகங்களுக்கிடையிலான முதலாவது கால்பந்தாட்டப்போட்டி, இங்கிலாந்தின் ஷீபீல்ட் மைதானத்தில் ஹல்லாம், ஷீபீல்ட் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.

1870: அல்ப்ஸ் மலைக்கூடாக 12.8 கி.மீ. நீளமான சுரங்கப்பாதை நிர்மாணம் பூர்த்தியாகியது.

1933: எவ்.எம். வானொலிக்கு காப்புரிமை பெறப்பட்டது.

1982: டைம் சஞ்சிகையினால் வருடாந்தின் சிறந்த நபர் விருது முதல் தடவையாக மனிதர் அல்லாத ஒன்றுக்கு – கணினிக்கு- வழங்கப்பட்டது.

1991: சோவியத் யூனியனின் நாடாளுமன்றம் சுப்ரீம் சோவியத் கூடி, சோவியத் யூனியனை சம்பிரதாயபூர்வமாக கலைத்தது.

1937: மத்திய ஐரோப்பாவில் வீசிய புயலினால் 137 பேர் பலி.

2003: ஈரானின் பாம் நகரில் பூகம்பத்தினால் சுமார் 10 ஆயிரம் பேர் பலி.

2004: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட பூகம்பத்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, மலேஷியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் சுமார் 250,000 பேர் பலி.

2006: நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் குழாயொன்று வெடித்ததால் 260 பேர் பலி.
 

No comments:

Post a Comment