Friday, December 31, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 31

1695: இங்கிலாந்தில் வீட்டு ஜன்னல்களுக்கு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1857: ஒட்டோவாவை கனடாவின் தலைநகராக விக்டோரியா மகாராணியார் தெரிவுசெய்தார்.
1963: மத்திய ஆபிரிக்க குடியரசானது ஸாம்பியா, மாலாவி, ரொடிசியா ஆகிய நாடுகளாக பிரிந்தது.
1986: பியூர்ட்டோ ரிக்கோவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 97 பேர் பலி.
1991: சோவியத் யூனியனின்  அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.
1992: செக்கஸ்லோவாக்கியா நாடானது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரு நாடுகளாக பிரிந்தது.
1999: ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து பொரிஸ் யெல்ட்சின் இராஜினாமா செய்தார். பிரதமர் விளாடிமிர் புட்டின் பதில் பிரதமராக பதவியேற்றார்.
1999: சிறையிலிருந்த 3 தீவிரவாதிகளை இந்திய அரசாங்கம் விடுவித்ததையடுத்து, இந்தியாவிலிருந்து  ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்தியன் எயார்லைன்ஸ் விமானத்தையும் 155 பயணிகளையும் ஹர்கத் உல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
1999: பனாமா கால்வாயை பனாமா அரசாங்கத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
2004: அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கிய தாய்பே 101 கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது

No comments:

Post a Comment