Friday, January 14, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 13


1797: ஆங்கில, பிரெஞ்சு கடற்படைகளுக்கிடையிலான மோதலில் சுமார் 900 பேர் பலி.

1893: பிரிட்டனின் சுதந்திர தொழிற்கட்சியின் முதற்கூட்டம் நடைபெற்றது.

1915: இத்தாலியில் இடம்பெற்ற பூகம்பத்தால் 29,800 பேர் பலி.

1939: அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் 20,000 சதுரகிலோமீற்றர் பரப்பளவான பற்றைகள் அழிப்பு: 71 பேர் பலி.

1942: ஆபத்துவேளையில் விமானத்திலிருந்து தானாக வெளியேறும் ஆசனம், இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மன் விமானியொருவரால் பயன்படுத்தப்பட்டது.

1953:யூகோஸ்லாவியாவில் ஜோசப் டிட்டோ ஜனாதிபதியாக தெரிவானார்.

1964: இந்தியாவின் கல்கத்தாவில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையிலான மோதலில் 100 பேர் பலி.

1964: பின்னாளில் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பராக பதவியேற்ற கரோல் வோஜ்டியேலா போலந்தின் கிராகோவ் பிராந்திய பேராயராக நியமிக்கப்பட்டார்.

1964: ரொபர்ட் சி. வீவர், அமெரிக்காவில் அமைச்சராக நியமிக்கப்பட்ட முதலாவது கறுப்பினத்தவரானார்.

1972: கானாவில் ஜனாதிபதி எட்வர்ட் அகுபோ அட்டோவும் பிரதமர் கோபி புஸியாவும் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

1985: எத்தியோப்பியாவில் ரயில் விபத்தொன்றில் 428 பேர் பலி.

1990: டக்ளஸ் வைல்டர் என்பவர் அமெரிக்காவின் மாநிலமொன்றுக்கு (வேர்ஜீனியா) ஆளுநராகத் தெரிவான முதல் கறுப்பினத்தவரானார்.

1991: சுதந்திரம் கோரி போராடிய லிதுவேனியர்கள் மீது சோவியத் யூனியன் இராணுவம் தாக்கியது. 14 பேர் பலி, சுமார் 1000 பேர் காயம்.

2001: எல் சல்வடோரில் நடைபெற்ற பூகம்பத்தில்  நூற்றுக்கும் அதிகமானோர் பலி.

No comments:

Post a Comment