Saturday, January 15, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 15

1559: பிரிட்டனில் முதலாம் எலிஸபெத் மகாராணியாருக்கு முடிசூட்டபட்டது.
1759: பிரித்தானிய நூதனசாலை திறக்கப்பட்டது.

1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.

1982: கூடைப்பந்தாட்டத்திற்கான விதிகளை ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் வெளியிட்டார்.

1943: உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமான பென்டகன் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

1966: நைஜீரியாவில் இராணுவப் புரட்சியின் மூலம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

1970: நைஜீரியாவில் பயாப்ரா பிராந்தியத்திற்கு சுதந்திரம் கோரி 30 மாதங்களாக போராடிய போராளிகள் சரணடைந்தனர்.

1970: லிபியாவில் கேணல் முவம்மர் கடாபி பிரதமராக பதவியேற்றார்.

1973: அமெரிக்க ஜனாபதிபதி ரிச்சர்ட் நிக்ஸன், வியட்நாமில் யுத்த நிறுத்தம் செய்வதாக அறிவித்தார்.
1977: சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

1991: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேறுவதற்கு ஐ.நா. விதித்திருந்த காலக்கெடு முடிவுற்றது.

1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஸ்லோவேனியா, குரோஷியாவின் சுதந்திரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது.

2001: இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியா அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
2009: யூ.எஸ். ஏயார்வேஸ் விமானமொன்று கோளாறுக்குள்ளானதால் அதை ஹட்சன் நதியில் விமானி தரையிறக்கினார். பயணிகள், ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment