Sunday, January 23, 2011

வரலாற்றில் இன்று: ஜனவரி 23

1368: சீனாவில் மிங் வம்ச ஆட்சி ஆரம்பமானது.

1556: உலக வரலாற்றில் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய பூகம்ப அனர்த்தம், சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் இடம்பெற்றது. இதில் 830,000 பேர் பலியாகினர்.
ரஷ்யா மற்றும் பிரஷ்யாவுக்கிடையில் போலந்து இரண்டாவது தடவையாக பிரிக்கப்பட்டது.

1849: எலிஸபெத் பிளக்வெல் என்பவர் நியூயோர்க்கின் ஜெனீவா மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றதன் மூலம் அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரானார்.

1870: பூர்வீக அமெரிக்கர்கள் 173 பேர் வெள்ளையின அமெரிக்கர்களால் கொல்லப்பட்டனர்.

1899: எமிலியோ அகுய்னால்டோ பிலிப்பைன்ஸின் முதலாவது ஜனாதிபதியானார்.

1904: நோர்வேயின் அலஸன்ட் நகரம் தீக்கிரையானதால் 10000 பேர் வீடுகளை இழந்தனர்.

1943:பப்புவா நியூகினியாவை ஜப்பானிடமிருந்து அவுஸ்திரேலிய, அமெரிக்கப்ப படையினர் கைப்பற்றினர்.

1963: கினியா பிஸு சுதந்திரப் போராட்டம் ஆரம்பமாகியது.

1973: வியட்னாமில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.

1997: மெடலின் அல்பிரைட், அமெரிக்காவின் முதலாவது பெண் இராஜாங்கச் செயலாளரானார்.

2002: அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ல், பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து கடத்தப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment