Tuesday, February 1, 2011

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 01

 1662: சீன ஜெனரல் கோக்ஸிங்கா, 9 மாதகால முற்றுகையின்பின் தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.
1793: பிரிட்டன், நெதர்லாந்து மீது பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.

1814: பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்ததால் 1200 பேர் பலி.
1835: மொரிசியஷில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1865: அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார்.

1924:  சோவியத் யூனியனை பிரிட்டன் அங்கீகரித்தது.

1958: எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபு குடியரசை ஸ்தாபித்தன.
1974: கோலாலம்பூர் நகரம் சமஷ்டி பிராந்தியமாக்கப்பட்டது.

1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி 15 ஆண்டுகள் அஞ்ஞான வாசத்தின்பின் ஈரானுக்குத் திரும்பினார்.

1982: செனகலும் காம்பியாவும் இணைந்து செனகாம்பியா கூட்டுச் சம்மேளனத்தை உருவாக்கின.

2003: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய கொலம்பிய விண்கலம் வெடித்துச்சிதறியதால் 7 விண்வெளி வீர வீராங்கனைகள் உயிரிழந்தனர்.
 

No comments:

Post a Comment