Wednesday, December 15, 2010

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 13

1937: சீனாவின் நான்கிங் நகரைக் கைப்பற்றிய ஜப்பானிய படையினரின் பல வாரகால வெறியாட்டம் ஆரம்பமாகியது. ஜப்பானிய படையினரால் 20000 பேர் கொல்லப்பட்டதுடன் 80,000 பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.
1959: பேராயர் மாகாரியோஸ் சைப்ரஸின் முதல் ஜனாதிபதியானார்.

1988: பலஸ்தீனத் தலைவர் யஸீர் அரபாத், அமெரிக்காவுக்குச் செல்ல விஸா வழங்கப்படாததால் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. பொதுச்சபையில்  உரையாற்றினார்.

2001: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதலாளிகள் உட்பட 15 பேர் பலி.

2003: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் திக்ரித் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் 9 கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment